tamilnadu

img

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை மறக்க வேண்டாம்... ஆட்சியாளர்களுக்கு மாயாவதி எச்சரிக்கை

லக்னோ:
இந்தியா ஒரு மதச்சார் பற்ற நாடு என்பதை பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மறந்து விடக்கூடாது என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி நினைவுபடுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டைப்போல இந்த புதிய ஆண்டு வலிநிறைந்ததாக இருக்கக் கூடாது. மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பாஜக அரசுகளின் மதவாத மற்றும் குறுகிய மனப்பான்மை அணுகுமுறைகளால் 2019-ஆம் ஆண்டில் அரசியல் சாசனம் பலவீனப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு, வன் முறை சம்பவங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. இது மிகவும் கவலையளிப்பதும், துரதிர்ஷ்டவசமானதும் ஆகும்.இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மறந்து விடக்கூடாது. அனைத்து மதங்களின் கலாச்சாரங்களை நாம் மதிக்கவேண்டும். அதேநேரம் அரசுக்கு எதிரான போராட்டங் களில் வன்முறை கூடாது.இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

;